கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் திடீர் அனுமதி

Update: 2023-11-14 08:49 GMT

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் சீரிய சிகிச்சை அளித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், சங்கரய்யாவை நேரில் சந்தித்ததாகவும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்