"இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி...": தீயாய் பரவிய ட்வீட் - Retweet செய்து ஏ. ஆர் ரகுமான் சொன்ன கருத்து

Update: 2023-05-04 13:51 GMT

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை விமர்சிக்கும் வகையிலான ட்விட்டர் பதிவை மேற்கோளிட்டு, மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டுமென ஏ. ஆர் ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்தநிலையில் இணையவாசி ஒருவர், கேரளாவை சேர்ந்த மசூதி கமிட்டியினர் ஏழைப்பெண்ணுக்கு 10 சவரன் தங்க நகை உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கி, மசூதியிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த செய்தியை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்திக்கு மற்றொரு கேரளா ஸ்டோரி எனவும் தலைப்பிட்டிருந்தார். அந்த பதிவை மேற்கோளிட்ட ஏ.ஆர் ரகுமான், மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், குணப்படுத்தகூடியதாகவும் இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்