சண்டையை தடுக்க சென்றவர் துடிதுடிக்க அடித்து கொலை..சென்னை ரயில்வே ஸ்டேஷன் அருகே பயங்கரம்

Update: 2023-05-01 11:13 GMT

சென்னயில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மூவரை போலீசார்கைது செய்தனர்.


சென்னை தரமணியை சேர்ந்தவர் ஞானவேல். கூலி தொழிலாளியான இவர், நேற்று இரவு தரமணி ரயில் நிலையம் அருகே மது அருந்தி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, கல்குட்டை பகுதியை சேர்ந்த இருவர், பெருங்குடியை சேர்ந்த 3 பேர் ஆகிய இரண்டும் கும்பலும் அருகருகே மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

திடீரென இந்த இரண்டு கும்பலுக்கும் இடையெ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கச் சென்ற ஞானவேலை, பெருங்குடியை சேர்ந்த கோபி, மாசிலாமணி, கோட்டீஸ்வரன் ஆகிய மூவரும் கட்டையால் தாக்கியதில், படுகாயமடைந்த ஞானவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த தரமணி போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்