"அமைச்சரை மாற்ற முதல்வருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Update: 2023-05-10 02:12 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 4 பயனாளிகளுக்கு, ரூபாய் 7 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த அதிமுக ஆட்சியின் போது திமுக எம்எல்ஏக்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் போதிய பணிகள் செய்து தரப்படவில்லை என்றார். ஆனால் தற்பொழுது அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியில் நடைபெற்று வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார். இலாகா மாற்றம் அரசை வழிநடத்துகின்ற அத்தனை அதிகாரமும் முதல்வரிடமும் இருக்கிறது என்றும் அமைச்சர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்