ஊரு விட்டு ஊரு வந்து அட்டூழியம்.. அடி தாங்க முடியாமல் கதறிய இளைஞர்கள்

Update: 2023-07-22 02:26 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 10 க்கும் மேற்ப்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றை ஏலம் மூலமாக குத்தகைக்கு எடுத்து பலர் மீன்களை வளர்த்து வருகின்றனர். மேலும், சிலர் கண்மாயிக்கு காவலுக்கு ஆட்களை வைத்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், ராஜ்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ள கண்மாயில் மீன்கள் பெருமளவில் திருடப்பட்டு வந்ததால் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, கண்மாயில் மீன்களை திருடிய 4 பேரை பிடித்து கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அடி தாங்க முடியாமல் மீன் திருடர்கள் கதறி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ராஜ்குமார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்