திடீரென கேட்ட சிறுமியின் அலறல் சத்தம்!! பதறி ஓடிவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-01-26 07:41 GMT

உதகை அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே வசித்து வருபவர் 7 வயது சிறுமி.

இவரை வட மாநில இளைஞர்கள் இருவர் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி கூச்சலிட்டதால் சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்,போலீசில் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா மற்றும் பாபுலான் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்