அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, செந்தில்பாலாஜி மனைவி மேகலா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.