கண் தெரியாத பாட்டியை ஏமாற்றி... பஸ் ஸ்டாண்டில் தவிக்கவிட்ட உறவினர்கள்

Update: 2022-10-28 15:12 GMT

நெல்லையில் உறவினர்களால் ஏமாற்றப்பட்டு, பேருந்து நிலையத்தில் தவிக்கவிடப்பட்ட மூதாட்டிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உதவியது பாராட்டை பெற்று வருகிறது.தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி முத்தம்மாள். இவரிடம் அவரது உறவினர்கள், பார்வை குறைபாட்டை போக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். பின்னர் முத்தம்மாளை நெல்லைக்கு அழைத்து வந்து நெல்லை பேருந்து நிலைய சாலையிலேயே தவிக்க விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை தொடர்பு கொண்டு தெரிவிக்க, அவர் இதுபற்றி மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். உடனடியாக நிர்வாகிகள், மூதாட்டியை மீட்டு நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் சென்றுள்ளனர். அப்போது முத்தம்மாளிடம் கனிவுடன் பேசி விசாரித்த சிவ கிருஷ்ணமூர்த்தி, தென்காசி ஆட்சியரிடம் பேசி முத்தம்மாளை முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். மேலும் உறவினர்கள் பணத்தை பெற்று மோசடி செய்தது குறித்து போலீசாரிடம் புகாரளிக்கவும் உதவினார். இதனையடுத்து மூதாட்டிக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்