மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியரின் டூவீலரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Update: 2022-12-17 03:25 GMT

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் முத்துக்குமார் என்ற கௌரவ விரிவுரையாளர், மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து அவரது பைக்கை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் தாக்க முயன்றனர்.

அப்போது, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெளியே வந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனிடையே பாலியல் தொடர்பாக எதுவும் நடக்கவில்லை என்ற கல்லூரி முதல்வர், இது தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்