இடி, மின்னலுடன் பெய்த பேய் மழை.. சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து

Update: 2023-05-03 02:02 GMT

மதுரையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கொந்தகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, சாலையில் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருந்த பள்ளத்தில் இறங்கியது. பேருந்தின் முன் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்