திருத்தணியில் ஓடும் ரயிலின் அடியில் சிக்கிக்கொண்ட
மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மார்க்கெட்டில் கஸ்தூரி என்ற மூதாட்டி பூ வியாபாரம் செய்து வருகிறார். அவர் உறவினருக்கு
சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில்
முருகப்பன் நகர் ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருப்பதியில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வருவதை அறியாமல் மூதாட்டி தண்டவாளத்தை கடந்த போது ரயிலின் அடியில் சிக்கி கொண்டார். உடனடியாக ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் மூதாட்டி காயங்களுடன் உயிர் தப்பினார்.
ரயிலில் வந்த மேலாளர் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு
மூதாட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.