குளமாக மாறிய பேருந்து நிலையம்.. சிக்கி தவிக்கும் | Ramanathapuram | Bus stand | Thanthitv

Update: 2024-10-11 03:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த மழையால், பேருந்து நிலையம் முழுவதும் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அத்துடன் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என குற்றம்சாட்டும் பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்