புதுடில்லி மதுபான கொள்கை வழக்கு - முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

Update: 2023-04-16 04:38 GMT

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதான நிலையில், சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்