ஏழைக்காக ரோட்டில் பாடிய கேரள மாணவி... ஆதிராவுக்கு குவியும் உதவிகள்.. | Kerala | Student | ThanthiTV

Update: 2023-06-10 12:34 GMT

யாசகம் பெறும் கண்பார்வையற்ற பெண்ணுக்கு உதவும் வகையில், தெருவோரம் நின்று பாடிய பள்ளி மாணவிக்கு வீடு கட்டித் தர வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்

கேரள மாநிலம் போத்துக்கல் பகுதியைச் சேர்ந்த ஆதிரா தன் தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது கண்பார்வையற்ற பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் பாடல் பாடி யாசகம் பெற்றார். அப்பெண்ணின் குரல் வளையில் சிக்கல் ஏற்பட்டு, அவரால் தொடர்ந்து பாட முடியாமல் போன நிலையில், இதைக் கண்ட ஆதிரா ஓடிச் சென்று மைக்கை வாங்கி அதே பாடலை முழுமையாக பாடினார்

Tags:    

மேலும் செய்திகள்