ரம்பத்தால் 35 துண்டுகளாக காதலியை வெட்டி வீசிய காதலன் - அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல் - டெல்லியில் பயங்கரம்

Update: 2022-11-22 13:36 GMT

டெல்லியில் ஷ்ரத்தாவை கொலை செய்ய பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேடு உள்ளிட்டவற்றை குருகிராமில் உள்ள புதரில் அப்தாப் அமீன் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. காதலி ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காதலி ஷ்ரத்தாவை கொல்ல பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேடு உள்ளிட்டவற்றை குருகிராமில் உள்ள புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதன்பேரில் டெல்லி போலீசார் அங்கு சென்று சில ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தாவை வெட்ட பயன்டுத்திய இறைச்சி வெட்டும் கருவியை மெஹ்ராலியில் உள்ள குப்பை கிடங்கில் வீசியதாகவும் அப்தாப் கூறியிருக்கிறார். இதுவரை 13 எலும்புகள், மண்டை ஓட்டின் அடிப்பகுதி மற்றும் தலை துண்டிக்கப்பட்ட தாடை ஆகியவை மீட்கப்பட்டிருக்கும் நிலையில் அவை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்