தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை

Update: 2022-08-25 14:20 GMT

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை


ஆம்பூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து 3 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 10கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 110பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய் கிழமை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்., 3 நாட்களாக தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில் ஆவணங்கள் ,பத்திரங்கள் கைப்பற்ற பட்டு உள்ளனவா, என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்