"உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடி பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்" எல்.முருகன் புகழாரம்

Update: 2022-09-17 11:12 GMT

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு "கடற்கரையில் மாபெரும் தூய்மை பணி" திட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து கடற்கரையை சுத்தம் செய்தார்...

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2047ல் நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் 2 வாரங்கள் சேவை வாரமாக கொண்டாடப்படுவதாகவும், கடற்கரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த பணியை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உண்மையான சமூக நீதி தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாகத் தெரிவித்த அவர், உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடி பிறந்த நாளை இன்று கொண்டாடடி வருவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்