`மறக்க முடியாத பிறந்தநாளாக மாறிய அந்த நிமிடம்...' கண்ணிமைக்கும் நொடியில் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-09-19 15:51 GMT

டெல்லி கீதா காலனி மேம்பாலத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். 19 வயதான கல்லூரி மாணவர் அஸ்வனி மிஸ்ரா தனது பிறந்த நாளை குருகிராமில் உள்ள பப்பில் தனது நண்பர்களுடன் கொண்டாடி விட்டு திரும்பியும் பொழுது இந்த விபத்து நேர்ந்தது. மிஸ்ரா தனது மொபைல் போனில் பாடல்களை மாற்றிக் கொண்டிருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த அனைவரும் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிஸ்ரா மற்றும் பாண்டே தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்