மேட்ரிமோனியில் அமெரிக்க பெண் விரித்த வலை...பேச்சிலே மயங்கிய பாண்டி டாக்டர்..!

Update: 2023-04-23 08:26 GMT

புதுச்சேரியை சேர்ந்த பாலாஜி என்பவர், தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழும் இவருக்கு 2வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர். இதற்காக மேட்ரிமோனியில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில், பாலாஜியின் செல்போனுக்கு, சோமஸ்ரீ நாயக் என்ற பெண் அறிமுகமானார். தான் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு சிரியாவில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். அவரது பேச்சில் மயங்கிய பாலாஜி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாகக் கூறி, பாலாஜியிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் அளவுக்கு தவணையாக வாங்கியுள்ளார். இதையடுத்து, சரிவர பேசாமல் இருந்ததால் சந்தேகமடைந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்