லாரி மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி... ஏலகிரிக்கு மனைவியுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்

Update: 2023-05-08 01:38 GMT

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த நிலேஷ் பாபு என்பவர், தனது மனைவி அபூர்வாவுடன், ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அந்தக் காரை ஹரிஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த நிலேஷ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மனைவி அபூர்வா லேசான காயமடைந்து உயிர் தப்பினார். படுகாயமடைந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்