30 மணி நேரத்தில் 200 மி.மீ அளவுக்கு கொட்டிய மழை... "தெப்பக்குளமான ரயில் நிலையம்"

Update: 2023-07-01 16:56 GMT

குஜராத் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 மணி நேரத்தில், பல இடங்களில் 200 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கட்ச் பகுதியில் பலத்த மழை காரணமாக, காந்திதாம் ரயில் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல், ஜுனாகர் பகுதியில் கல்வா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

30 மணி நேரத்தில் 200 மி.மீ அளவுக்கு கொட்டிய மழை... "தெப்பக்குளமான ரயில் நிலையம்"

Tags:    

மேலும் செய்திகள்