அதிமுகவில் அடுத்தடுத்து நிகழும் பரபரப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று...

Update: 2023-01-30 02:03 GMT

அதிமுகவில் அடுத்தடுத்து நிகழும் பரபரப்புக்கு மத்தியில், உச்சநீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

ஆனால் அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இருதரப்பினரும் தனித்தனியே வேட்பாளரை களமிறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், இரட்டை இலைச் சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அதிமுகவின் பொதுக்குழுவில் தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்