பல உயிர்களை சாய்த்த குவைத் தீ விபத்து - நேரே செல்லும் மத்திய இணை அமைச்சர்

Update: 2024-06-13 06:06 GMT

பல உயிர்களை சாய்த்த குவைத் தீ விபத்து - நேரே செல்லும் மத்திய இணை அமைச்சர்

குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய இணை அமைச்சர் குவைத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தீ விபத்து குறித்து குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யஹ்யாவுடன் பேசியதாக, பதிவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வலியுறுத்தியதாவும், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குவைத் சென்றடைந்த பிறகு நிலைமையை ஆய்வு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்