`இந்தியா- சீனா' - முடிவுக்கு வந்தது எல்லை விவகாரம்? வெளியான முக்கிய தகவல்

Update: 2024-10-21 14:09 GMT

`இந்தியா- சீனா' - முடிவுக்கு வந்தது எல்லை விவகாரம்? வெளியான முக்கிய தகவல்

இந்தியா சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியா சீனா இடையேயான ரோந்து பிரச்சனைக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்த உடன்பாடு எட்டப்பட்டதன் மூலம் 2020இல் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டதோடு, இரு தரப்பு படைகளை விலக்கவும் வழி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த உடன்பாடு எட்டப்பட்டதன் மூலம் கிழக்கு லடாக் பகுதியில், இந்தியா சீனா இடையே நீடித்து வந்த எல்லை பிரச்சனை ஏறத்தாழ முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்