சவாலாக இருந்த உக்ரைனின் சுமி நகரம் - இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு

உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-09 15:10 GMT
ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் உக்ரைனின் சுமி நகரம், உக்ரைன்- ரஷ்யா போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இந்தியர்களை கடந்த திங்கட்கிழமை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகளுக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக, சுமி நகரில் மனிதாபிமான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு தவித்து வந்த 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்