உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர் - மாணவருடன் இந்தியா திரும்பிய நாய்

ஆபிரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மாணவர் தனது வளர்ப்பு பிராணியையும் உடன் அழைத்து வந்தார்.

Update: 2022-03-03 05:17 GMT
ஆபிரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மாணவர் தனது வளர்ப்பு பிராணியையும் உடன் அழைத்து வந்தார். 

உக்ரைனில் உச்சக்கட்ட போர் நடந்து வரும் சூழலில் அங்கிருக்கும் இந்தியர்கள் ஆப்ரேஷன் கங்கா என மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். பதற்றமான சூழலில் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் மாணவர் ஒருவர் எந்நேரமும் குண்டு சத்தம் கேட்பதால் தனது வளர்ப்பு பிராணி மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், அதை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர உதவுமாறு வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனிற்கு சென்ற விமானத்தில் பொறியியல் மாணவருடன் அவரது வளர்ப்பு பிராணியும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டது. மாணவருடன் வளர்ப்பு பிராணியும், விமானத்தில் ஏறும் வீடியோவை அமைச்சர் விஜய் குமார் சிங் பகிர்ந்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்