சிறுவன் மீது சூடான கஞ்சியை ஊற்றிய பக்கத்து வீட்டு பெண்

Update: 2024-06-25 22:13 GMT

காரைக்காலில் முன்விரோதம் காரணமாக சிறுவன் மீது சூடான கஞ்சி தண்ணீரை பக்கத்து வீட்டு பெண் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்த நவநீதன் என்பவரின் மனைவி நதியா, தனது வீட்டின் முன் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப் என்பவரின் மனைவி ராஜமேரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16-ஆம் தேதி, நதியா கடையில் தனது மகன் தருணுடன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜமேரி தான் கொண்டு வந்திருந்த சூடான கஞ்சி தண்ணீரை சிறுவன் தருண் மீது ஊற்றி உள்ளார். இதனைத் தடுக்க வந்த நதியாவையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த சிறுவனை காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து நதியா அளித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராஜமேரியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்