"எனக்கும் ஆடு வேண்டும்" - சிரித்து கொண்டே கேட்ட எம்.பி கதிர் ஆனந்த்

Update: 2024-09-22 11:00 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக நாகல் ஊராட்சியில் 2 பெண் பிள்ளைகளை உள்ள குடும்பத்தாருக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மேடையில் இருந்த எம்பி கதிர் ஆனந்த் "எனக்கும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்... எனக்கும் ஆடு வழங்க வேண்டும்" என நகைச்சுவையாக கேட்கவே...

அமைச்சர் துரைமுருகனுக்கும் எம்பி கதிர் ஆனந்திற்க்கும் ஆடுகள் பரிசாக வழங்கப்பட்டது விழாவை கலகலப்பாக்கியது...

Tags:    

மேலும் செய்திகள்