லிவிங் டு கெதரில் வாழ்ந்த பெண் தற்கொலை - இளைஞருக்கு வலைவீச்சு

Update: 2024-09-22 12:53 GMT

சென்னை, தாம்பரம் அருகே லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெண்ணின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் குளோரியா. மேற்கு தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடையில் வேலை பார்த்து வந்த இவர்,

அதே துணி கடையில் வேலை பார்த்து வரும் செஞ்சியை சேர்ந்த நபர் ஒருவருடன், தாம்பரம் ரங்கநாதபுரம் தெருவில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டிற்குள் திடீரென குளோரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்