மைசூரு அரண்மனையில் மிரண்டு ஓடிய யானைகள் - அலறிய மக்கள்.. பரபரப்பு காட்சி

Update: 2024-09-21 08:30 GMT

மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 11 யானைகள் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்கு, சுமார் 7 கிலோமீட்டர் அணிவகுத்து செல்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டன. அப்போது, தனஞ்செயா மற்றும் கஞ்சன் என்ற இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், தனஞ்செயா யானையை பாகன் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் கஞ்சன் யானை பாகனை விட்டு ஓடத் தொடங்கியது. அரண்மனை வளாகத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மக்கள் நடமாடும் சாலைக்கு சென்றது. யானை மிரண்டு ஓடிவருவதை பார்த்து அச்சம் அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்