பைக் ரேஸ் இளைஞர்கள் செய்த பகீர் செயல்..அபாய நிலையில் அப்பாவி நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2024-07-17 06:15 GMT

பைக் ரேஸ் இளைஞர்கள் செய்த பகீர் செயல்..அபாய நிலையில் அப்பாவி நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

திருச்சியில், பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் விபத்து ஏற்பட்டது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே வடக்கு ஆண்டார் வீதியில், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர் மீது, ரேஸ் பைக்கில் வந்தவர்கள், இடித்து தள்ளி விட்டு சென்றனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்