சுற்றி வந்த இடத்தில் கையில் கம்பியுடன் நின்ற சிறுவன் உயிர்.. அதிர்ச்சி காரணம்.. கதறும் தாய்

Update: 2024-10-02 14:21 GMT

திருச்சி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ் - சிவரஞ்சனி தம்பதியினரின் மகன் விருத்திவ் அஜய், தனது நண்பர்களுடன் வீட்டருகே விளையாடியுள்ளான். அப்போது சாலையோர மின்கம்பத்தில் அபாயகரமான முறையில் தொங்கிக்கொண்டிருந்த மின் வயர் அஜய் மீது உரசியதில், சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பணியின் போது மின் வயர்களை அபாயகரமான முறையில் ஊழியர்கள் கீழே விட்டுச் சென்றதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்