கிடைத்த ரகசிய தகவல்... போலீசாரின் வேட்டையில் கொத்தாக சிக்கிய கும்பல்

Update: 2024-10-14 03:09 GMT
  • திருச்சியை சேர்ந்த ரவுடிகள் கிராம பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியில் திருச்சியை சேர்ந்த ரவுடிகள் சிலர் தலைமறைவாகியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நெடுவாசல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசலை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பரின் காரில் மாத்தூரை சேர்ந்த பாலமுத்து ஆலங்குடியை சேர்ந்த மார்த்தாண்டன், குருமூர்த்தி ஆகியோர் பயணித்துள்ளனர். இதில் பாலமுத்து போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது பாலமுத்துவின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேரையும் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்தனர். இதில், பன்னீர் செல்வம் தவிற மற்றவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
Tags:    

மேலும் செய்திகள்