எம்.எல்.ஏ அத்தை கொலை - கொலை செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Update: 2024-10-14 05:46 GMT
  • சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பொன்னியம்மாள். இவர், ஓமலூர் அதிமுக எம்.எல்.ஏ மணியின் அத்தையான நிலையில், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு வேலூர் காவிரி ஆற்றில் சடலமாக வீசப்பட்டார். பணம் மற்றும் நகைக்காக நடந்த இந்த கொலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த சித்துராஜ் மற்றும் அவரது நண்பர் தனுஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பேரில், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்