ட்ரீட்மென்ட்டுக்கு வந்த பெண்ணிடம் அசிங்கம் செய்த நபர்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி

Update: 2024-10-14 06:10 GMT
  • பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் மற்றும் தகராறில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சையை சேர்ந்த பெண் ஒருவர் இரவில் சிகிச்சைக்காக தங்கியிருந்த நிலையில், ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த 4 பேர், பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஸ்ரீதரை தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் அனைவரையும் மருத்துவமனையை விட்டு கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர் வெங்கடேசனை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து வெங்கடேசன் புகார் அளித்த நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த ஸ்ரீதர், தகராறில் ஈடுபட்ட பண்ருட்டி பகுதியை சேர்ந்த மாயமணி, மோகன், ரஞ்சித் குமார், பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்