NIT-யில் அடுத்த அதிர்ச்சி.. பாலியல் தொல்லையை தொடர்ந்து மாணவி மாயம்... திருச்சியில் பரபரப்பு

Update: 2024-09-19 12:20 GMT

திருச்சி துவாக்குடி என்.ஐ.டியில் எம்.சி.ஏ முதலாமாண்டு படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமான நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி கடந்த 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். இன்று வரை அவர் விடுதிக்குத் திரும்பாத நிலையில், செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இது தொடர்பாக என்ஐடி பாதுகாவலர்கள்போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் என்ஐடி கல்லூரி விடுதி மாணவியரிடம் தற்காலிக பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது விடுதி மாணவி ஒருவர் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்