சவுக்கு சங்கருக்கு பெரும் சிக்கல்..! இறங்கிய பேரிடி | Savukku Shankar

Update: 2024-06-26 14:12 GMT

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிஎம்டிஏ அதிகாரி அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அந்த வழக்கிலும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் மீது கடந்த மாதம் 12-ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்தி, அவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளது. சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டது என்றும், இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்