ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2024-07-21 01:57 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த கல்லூரி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஷ்வினி. இவர், திங்கள்நகர் செல்ல அரசு பேருந்தில் ஏறி படிகட்டு அருகே நின்று பயணம் செய்துள்ளார். பேருந்து இரணியல் வள்ளியாற்று பாலம் அருகே வளைவான பகுதியை கடந்தபோது, போருந்தின் உள்ளே இருந்து தேஜாஷ்வினி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த மாணவியை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்