கோலிவுட்டை உறையவைத்த கதை.. பாதிக்கப்பட்டவர் பிரத்யேக பேட்டி

Update: 2024-08-31 12:46 GMT

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது உறவினர்களை இழந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வாழை திரைப்படத்தை இயக்கியுள்ளதாக, அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான வாழை திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, லாரி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட புளியங்குளத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர், இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினர்களும், அந்த விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்