தாண்டவமாடும் பிரமாண்ட சிவன்... அப்படியே மெய்சிலிர்த்து நின்ற மக்கள்

Update: 2024-10-07 07:10 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா விழாவை முன்னிட்டு, காளி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பு துவங்கி பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் காளி வேடமணிந்த பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி சென்றனர். இந்த காளி ஊர்வலத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரமாண்ட சிவன் மற்றும் காளி தெய்வங்களின் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்