இன்னும் சென்னை அருகே மாறாத காட்சி.. சொல்ல முடியா வேதனையில் கெஞ்சும் மக்கள்

Update: 2024-10-18 04:50 GMT

இன்னும் சென்னை அருகே மாறாத காட்சி.. சொல்ல முடியா வேதனையில் கெஞ்சும் மக்கள்

செங்குன்றம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதி என்பதால், தண்ணீர் வடிய மேலும் சில நாட்கள் ஆகும் என்ற அப்பகுதி மக்கள், வருடா வருடம் இதே சூழல் காணப்படுவதால், கால்வாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்