திருவள்ளூவர் சிலை அருகே அதிரவிட்ட 500 பேர்.. குவிந்த போலீஸ்.. பரபரப்பான திருவாரூர்

Update: 2024-07-22 13:12 GMT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்கள் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகாலமாக வழங்க வேண்டிய தடைக்காலம், மழைக்கால சேமிப்பு சந்தா போன்ற அரசால் வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் மானியங்களை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500 ற்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்வள இணை இயக்குனர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்