ஷாக் அடித்து உடல் விறைத்து நின்ற அர்ச்சகர்.. ரிப்போர்ட்டரின் சமயோஜித முடிவால் காப்பாற்றப்பட்ட உயிர்

Update: 2024-10-18 04:53 GMT

கேட்டை திறந்ததும் ஷாக் அடித்து உடல் விறைத்து நின்ற அர்ச்சகர்.. தினத்தந்தி ரிப்போர்ட்டரின் சமயோஜித முடிவால் காப்பாற்றப்பட்ட உயிர்

சென்னை அடுத்த புழல் பகுதியில் கோயில் கேட்டை திறக்க முற்பட்ட போது, மின்சாரம் பாய்ந்து மயங்கிய பூசாரியை பொதுமக்கள் காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒருவர் பெரிய கட்டையை எடுத்து பூசாரியை மீட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர் சமயோஜிதமாக செயல்பட்டு சிபிஆர் கொடுத்தார். சிபிஆர் சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்து பூசாரி உயிர் பிழைத்ததை பார்த்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

சென்னை புழல் பகுதியில் மின்சாரம் தாக்கி மயங்கிய பூசாரியை மீட்ட நபர்,, தினத்தந்தி நிருபர் இசக்கிராஜா என தெரியவந்துள்ளது. மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த பூசாரிக்கு 'தினத்தந்தி' நிருபர் இசக்கிராஜாவும், ஆட்டோ ஓட்டுனரும் சி.பி.ஆர் அளித்து காப்பாற்றினர். சமயோஜிதமாக செயல்பட்ட தினத்தந்தி நிருபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்