விஷம் வைத்து தெரு நாய்களை கொலை செய்த நபர் - அதிர்ச்சி காரணம்

Update: 2024-10-25 14:47 GMT

திருவேற்காட்டை அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவை சேர்ந்த மோகன், தெரு நாய்களை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த நாய்கள், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜியின் வளர்ப்பு நாயை கடித்த‌தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, இரவு நேரத்தில் உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை உட்கொண்ட 2 நாய்கள் இறந்து போனதால், அதிர்ச்சி அடைந்த மோகன், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, 2 நாய்களை பிரேத பரிசோதனைக்காக வேப்பேரியில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விஷம் வைத்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லமாக வளர்த்த நாய்கள் இறந்த‌தை தாங்கிக்கொள்ள முடியாமல் புகார் அளித்த‌தாக மோகன் கண் கலங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்