பொதுவெளியில் பெண்ணை வீடியோ எடுத்த கவுன்சிலர்?

Update: 2024-10-13 16:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் அசோக். திருத்தணி நகர் மன்ற தி.மு.க. கவுன்சிலரான இவர், மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டிருந்த பெண் ஒருவரை தன் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பெண்ணின் மகன், அசோக்கை தட்டிக்கேட்டதாக சொல்லப்படுகிறது. இதில் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானதாகவும், அப்போது திமுக கவுன்சிலரான அசோக் தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேரை அழைத்து தட்டிக்கேட்ட பெண்ணையும், அவரின் மகன்களையும் கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்