8-ஆம் வகுப்பு மாணவிக்கு கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை - திருப்பத்தூரை அதிர வைத்த கொடூரன்

Update: 2024-10-04 04:14 GMT

13 வயது சிறுமியிடம் கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் காங்கனைக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியைக் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் சிறுமியின் பெற்றோரை கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பெற்றோர் சோதனை செய்து உள்ளனர்.அதில் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் கேட்ட போது தான் மேற்கண்ட விவரங்களைச் சிறுமி கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தாய் அளித்த புகாரில் ஜெயபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்