சிக்கிய ரூ.2 கோடி மதிப்புள்ள பொருள் 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2024-10-26 15:01 GMT

பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், வாசனை திரவியங்களை தயாரிக்கவும் திமிங்கல எச்சம் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த இந்த திமிங்கல எச்சத்தை திருப்பத்தூரில் சிலர் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், முத்துக்குமார் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் 2 கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் கண்டெடுக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகார்த்திகேயன், வினித் உட்பட 7 பேரை கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரியவந்த நிலையில், யாரிடம் இருந்து கிடைத்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்