பள்ளியை சூறையாடிய `தற்குறிகள்'இரவில் அரங்கேறிய அதிர்ச்சி.. அதிரும் திருச்சி..மர்ம கும்பலுக்கு வலை விரிக்கும் காவல்

Update: 2024-04-25 14:11 GMT

திருச்சியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை சூறையாடி சென்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்,100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவில் அந்த பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல், மின்விசிறிகள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், பீரோவில் இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்