"கத்தினால் குத்திவிடுவேன்" - அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த போதை ஆசாமி - எண்டில் விழுந்த ஊமைக்குத்து

Update: 2024-09-21 06:36 GMT

திண்டிவனம் டி. எம். ஜி. நகரை சேர்ந்தவர் செந்தாமரை என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது, ஆத்தூரை சேர்ந்த செழியன் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால் செந்தாமரை கூச்சலிட்டதால், கத்தினால் குத்திவிடுவேன் என்றும் செழியன் மிரட்டியுள்ளார். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், செழியனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சேற்றில் விழந்து எழுந்து வந்த செழியனை, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்த போலீசார், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து போதையில் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்