குடிவெறியில் அட்ராசிட்டி... தட்டிக்கேட்ட மாமியாருக்கு சரமாரி வெட்டு... மருமகன் வெறிச்செயல்

Update: 2024-06-26 15:59 GMT

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் பேச்சியம்மாள். தன் கணவரை பிரிந்து தனியே வசித்து வந்த இவர், கேரளாவை சேர்ந்த அப்துல் மானிப் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்துல் மாணிப், தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்த அப்துல் மாணிப், தன்னை தட்டிக் கேட்ட மாமியாரை அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயங்களுடன் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாமியாரை அரிவாளால் வெட்டிய போது கீழே விழுந்ததில் அப்துல் மாணிப்பும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்